புதுச்சேரியில் நாளை இண்டியா கூட்டணி பந்த் - ‘அத்தியாவசிய சேவைகள் பாதிக்காது’

2 days ago 2

புதுச்சேரி: புதுச்சேரியில் மின் கட்டண உயர்வை திரும்பப் பெற வலியுறுத்தி நாளை (செப்.18) முழு அடைப்புப் போராட்டத்துக்கு இண்டியா கூட்டணி கட்சிகள் அழைப்பு விடுத்துள்ள நிலையில், அனைத்து அத்தியாவசிய சேவைகளும் வழக்கம்போல் இயங்கும் என்று ஆட்சியர் குலோத்துங்கன் தெரிவித்துள்ளார்.

புதுச்சேரியில் கடந்த ஆகஸ்ட் 16-ல் இருந்து மின் கட்டண உயர்வு முன் தேதியிட்டு அமுலுக்கு வந்துள்ளது. இதை ரத்து செய்ய வலியுறுத்தி அரசியல் கட்சிகளும், சமூக அமைப்புகளும் தொடர்ந்து பலக்கட்ட போராட்டங்களை நடத்தி வருகின்றனர். மின் கட்டண உயர்வை திரும்பப் பெற வலியுறுத்தி நாளை (செப்.18) முழு அடைப்புப் போராட்டத்துக்கு இண்டியா கூட்டணி கட்சிகள் அழைப்பு விடுத்துள்ளன. இந்நிலையில், அரசியல் கட்சிகள் மற்றும் அமைப்புகள் முழு அடைப்பு போராட்டத்துக்கு அழைப்பு விடுத்திருந்தாலும் அனைத்து அத்தியாவசிய சேவைகளும் வழக்கம்போல் இயங்கும் என புதுச்சேரி மாவட்ட ஆட்சியர் குலோத்துங்கன் தெரிவித்துள்ளார்.

Read Entire Article