புதிய பாம்பன் ரயில் பாலத்தை முற்றுகையிட மீனவர்கள் முடிவு

2 hours ago 3

ராமேசுவரம்: ராமேசுவரம் அருகே தங்கச்சிமடத்தில் உள்ள தனியார் அரங்கத்தில் ராமநாதபுரம், தூத்துக்குடி, புதுக்கோட்டை, நாகை, காரைக்கால், தஞ்சாவூர் ஆகிய ஆறு மாவட்ட மீனவர்களின் ஆலோசனை கூட்டம் வெள்ளிக்கிழமை (செப்.20) மாலை நடைபெற்றது.

இந்த கூட்டத்திற்கு மீனவப் பிரதிநிதி சேசுராஜா தலைமை வகித்தார். மீனவப் பிரதிநிதிகள் போஸ், சகாயம், தட்சிணாமூர்த்தி, லூர்துராஜ் உள்ளிட்டோர் முன்னிலை வகித்தனர். இந்த கூட்டத்தில் இலங்கை கடற்படையினரால் தமிழக மீனவர்கள் மீது நடத்தப்படும் தொடர் மனித உரிமை மீதான தாக்குதல்களை கண்டிக்காத மத்திய அரசுக்கு கண்டனம் தெரிவிக்கப்பட்டது.

Read Entire Article