சென்னை: டெல்லியில் பிரதமர் மோடியைசந்தித்த முதல்வர் ஸ்டாலின், சென்னை மெட்ரோ ரயில் 2-வது கட்ட பணிகள் மற்றும்ஒருங்கிணைந்த கல்வி திட்டத்துக்கான மத்திய அரசின்நிதியை உடனே வழங்க வேண்டும். மீனவர் பிரச்சினைக்கு தீர்வு காண வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளார்.
டெல்லி சென்ற முதல்வர் ஸ்டாலின் நேற்று காலை 11 மணிக்கு பிரதமர் மோடியை அவரது அலுவலகத்தில் சந்தித்தார். சென்னை மெட்ரோ2-ம் கட்ட திட்ட பணிகள், ஒருங்கிணைந்த பள்ளிக்கல்வி திட்டங்களுக்கான நிதி கோரியும், மீனவர் பிரச்சினையில் நிரந்தர தீர்வு காண வலியுறுத்தியும் பிரதமரிடம் கோரிக்கை மனு அளித்தார். இந்த சந்திப்பு 45 நிமிடங்கள் நீடித்தது. அப்போது, திமுக எம்.பி.க்கள் டி.ஆர்.பாலு, கனிமொழி, தலைமைச் செயலர் முருகானந்தம் ஆகியோர் உடன் இருந்தனர்.