பாளையங்கோட்டையில் மாணவியை மது அருந்த பேராசிரியர்கள் அழைப்பு... ஒருவர் கைது மற்றொருவருக்கு போலிசார் வலை

5 days ago 4
திருநெல்வேலி மாவட்டம், பாளையங்கோட்டையில் கல்லூரி மாணவியை மதுகுடிக்க வரும்படி செல்போனில் தொடர்பு கொண்டு கட்டாயப்படுத்தியதாக 2 பேராசிரியர்கள் மீது அளிக்கப்பட்ட புகாரில் ஒருவரை கைது செய்து மற்றொருவரை தேடி வருவதாக போலீசார் தெரிவித்தனர். தூய சவேரியார் கல்லூரியில் சுயநிதி பிரிவில் பேராசிரியர்களாக பணியாற்றும் செபாஸ்டின் மற்றும் பால்ராஜ் ஆகியோர் தன்னிடம் விரும்பத்தகாத வகையில் பேசியதுடன் மது அருந்துவதற்கும் வரும்படி கட்டாயப்படுத்தியதாக மாணவி பெற்றோரிடம் தெரிவித்ததாக கூறப்படுகிறது. பெற்றோர் அளித்த புகாரில், 3 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிந்து செபாஸ்டினை கைது செய்ததாகவும், தலைமறைவான பால்ராஜை தேடி வருவதாகவும் போலீசார் தெரிவித்தனர்.
Read Entire Article