பாலக்கோடு அருகே அரசு பஸ் கவிழ்ந்து 20 பயணிகள் படுகாயம்

4 months ago 21


பாலக்கோடு: பாலக்கோடு அருகே அரசு பஸ் கவிழ்ந்து 20 பயணிகள் படுகாயமடைந்தனர். பெங்களூரில் இருந்து ஈரோடு நோக்கி ஒரு அரசு பஸ் புறப்பட்டது. இந்த பஸ்சில் மேட்டூரை சேர்ந்த கோவிந்தராசு (37) டிரைவராகவும், நடத்துநராக நட்ராஜ் (42) என்பவரும் இருந்தனர். இந்த பஸ்சில் 42 பயணிகள் பயணம் செய்தனர். இன்று காலை 9.30 மணியளவில் தர்மபுரி மாவட்டம் பாலக்கோடு அருகே கோடியூர் என்ற இடத்தில் பஸ் வந்து கொண்டிருந்தது. அந்தநேரம் திடீரென டிரைவர் பிரேக் போட்டார். அப்போது பெய்த மழை காரணமாக கட்டுப்பாட்டை இழந்த பஸ் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.

இதில் பஸ்சின் முன்பக்க கண்ணாடி உடைந்து சேதமானது. இந்த விபத்தில் இடிபாடுகளுக்குள் சிக்கிய சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை 20 பயணிகள் காயம் அடைந்தனர். இந்த தகவல் அறிந்த பாலக்கோடு போலீ சார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்தனர். அவர்கள் பொதுமக்கள் உதவியுடன் காயமடைந்த 20 பயணிகளை மீட்டு பாலக்கோடு அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

The post பாலக்கோடு அருகே அரசு பஸ் கவிழ்ந்து 20 பயணிகள் படுகாயம் appeared first on Dinakaran.

Read Entire Article