பள்ளியின் வளர்ச்சிக்கு வழங்கிய நல்லாசிரியர்

1 week ago 13

பள்ளிபாளையம், செப்.12: நல்லாசிரியர் விருது பெற்ற அரசு பள்ளி ஆசிரியர், விருது தொகை ₹10 ஆயிரத்தை, தான் பணியாற்றும் பள்ளியின் வளர்ச்சி நிதியாக வழங்கினார். பள்ளிபாளையம் வட்டாரம், வெடியரசம்பாளையம் அரசு தொடக்க பள்ளி ஆசிரியர் சொர்ணதீபம். இவரது கற்பித்தல் பணியை பாராட்டி, தமிழக அரசு கடந்த ஆசிரியர் தினத்தில், டாக்டர் ராதாகிருஷ்ணன் விருது வழங்கி கவுரவித்தது. சென்னையில் நடைபெற்ற விழாவில், பள்ளி கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி இந்த விருதினை ஆசிரியருக்கு வழங்கினார். நல்லாசிரியர் விருது பெற்ற ஆசிரியருக்கு பாராட்டு விழா நடைபெற்றது. பெற்றோர் ஆசிரியர் கழக தலைவர் சாமி, தலைமை ஆசிரியர் மெஜலா, உதவி தலைமை ஆசிரியர் சேகர் மற்றும் ஆசிரியர்கள், பெற்றோர்கள் பாராட்டினர். ஆசிரியர் சொர்ணதீபம், தமக்கு தமிழக அரசு வழங்கிய நல்லாசிரியர் விருது தொகை பத்தாயிரம் ரூபாயை, பள்ளியின் வளர்ச்சிக்கு வழங்குவதாக தெரிவித்து, அதற்கான காசோலையை பள்ளி நிர்வாகத்திடம் ஒப்படைத்தார்.

The post பள்ளியின் வளர்ச்சிக்கு வழங்கிய நல்லாசிரியர் appeared first on Dinakaran.

Read Entire Article