கடலூர்: பரங்கிப்பேட்டை அருகே பு.முட்லூர் அருகே கார் மீது லாரி நேருக்கு நேர் மோதிய விபத்தில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த உறவினர்கள், குழந்தை உட்பட 5 பேர் உயிரிழந்தனர். இது குறித்து பரங்கிப்பேட்டை போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
மயிலாடுதுறை மாவட்டம் குத்தாலம் அடுத்த நக்கம்பாடி கிராமத்தைச் சேர்ந்தவர் முகமது அன்வர் (56). இவரது உறவினர் ஒருவர் உடல்நலக் குறைவால் துபாயில் இருந்து அழைத்துவரப்பட்டு சென்னையில் உள்ள மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். இவரை பார்ப்பதற்காக முகமது அன்வர் தனது உறவினர்களுடன் ஒரு காரில் சென்னைக்கு புறப்பட்டுச் சென்றார்.