பணியில் சேர்ந்த நாளில் இருந்து பணப்பலன் பெற தற்காலிக ஊழியர்கள் தகுதியானவர்கள்: ஐகோர்ட்

1 week ago 11

மதுரை: தற்காலிக ஊழியர்கள் பணியில் சேர்ந்த நாளிலிருந்து பணப்பலன் பெற தகுதியானவர்கள் என உயர் நீதிமன்ற மதுரை கிளை கருத்து தெரிவித்துள்ளது.

திண்டுக்கல் மாவட்டத்தை சேர்ந்த அர்ஜூனன், உயர் நீதிமன்ற மதுரை அமர்வில் தாக்கல் செய்த மனு: திண்டுக்கல் மாவட்ட அரசு மருத்துவமனையில் உள்ள மாவட்ட பார்வையற்றோர் சங்கத்தில் 2000-ம் ஆண்டில் ஓட்டுனராக பணியில் சேர்ந்தேன். என்னை பணி நிரந்தரம் செய்யக் கோரி உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தேன். அந்த வழக்கில் எனக்கு பணி நிரந்தரம் வழங்க 2010-ல் உத்தரவிடப்பட்டது. பின்னர் 2011-ல் என்னை பணி நிரந்தரமாக்கினர். எனக்கு நான் பணியில் சேர்ந்த 2000-ம் ஆண்டிலிருந்து உரிய பணப்பலன்கள் வழங்க உத்தரவிட வேண்டும், என்று மனுவில் கூறப்பட்டிருந்தது.

Read Entire Article