நேபாள சுற்றுலா பயணி தவறவிட்ட ஆப்பிள் செல்போன்; பேருந்தை துரத்திப் பிடித்து ஒப்படைத்த புதுச்சேரி ஆட்டோ ஓட்டுநர்கள்

1 week ago 10

புதுச்சேரி: புதுச்சேரிக்கு சுற்றுலா வந்த நேபாளத்தைச் சேர்ந்த சுற்றுலாப் பயணி ஆட்டோவில் தவறவிட்ட விலையுயர்ந்த ஆப்பிள் செல்போனை, ஆட்டோ ஓட்டுநர்கள் அவர் புறப்பட்டுச் சென்ற பேருந்தை தேடிக் கண்டுபிடித்து ஒப்படைத்த சம்பவம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

புதுச்சேரி செட்டித்தெரு - மிஷின் வீதி சந்திப்பில் ஆட்டோ ஸ்டாண்ட் உள்ளது. இங்குள்ள ஓட்டுநர் சீனிவாசனின் ஆட்டோவில் வந்த நேபாளத்தைச் சேர்ந்த பெண் சுற்றுலா பயணி ஒருவர், தனது கையில் வைத்திருந்த ஆப்பிள் செல்போனை மறந்து போய் ஆட்டோவிலேயே விட்டுவிட்டு இறங்கிச் சென்றுள்ளார்.

Read Entire Article