நீலகிரி - மஞ்சூர் கூட்டுறவு தேயிலை தொழிற்சாலையில் தீ விபத்து: இயந்திரங்கள் சேதம்

2 days ago 2

மஞ்சூர்: நீலகிரி மாவட்டம் மஞ்சூர் கூட்டுறவு தேயிலை தொழிற்சாலையில் ஏற்பட்ட தீ விபத்தால் பரபரப்பு ஏற்பட்டது. நீலகிரி மாவட்டத்தில் 16 கூட்டுறவுத் தேயிலை தொழிற்சாலைகளை இயங்கி வருகின்றன. இதில் மஞ்சூரில் உள்ள கூட்டுறவு தேயிலை தொழிற்சாலையில் 2,000-க்கும் அதிகமான உறுப்பினர்கள் இருப்பதால் எப்போதும் இந்த தேயிலை தொழிற்சாலை பரபரப்பாக இயங்கி வரும்.

சுற்றுவட்டாரத்தைச் சேர்ந்த 15-க்கும் மேற்பட்ட கிராமங்களில் இருந்து 2000-க்கும் மேற்பட்ட உறுப்பினர்கள் தங்கள் தோட்டங்களில் பறிக்கும் தேயிலைகளை இங்கு விற்பனை செய்து வருகின்றனர். அந்த பசுந்தேயிலை மூலம் இங்கு தேயிலைத்தூள் உற்பத்தி செய்யப்பட்டு குன்னூர் இன்கோசர்வ் மூலம் விற்பனை செய்யப்படுகிறது.

Read Entire Article