நாட்டை துண்டாட விரும்பும் சக்திகளுக்கு ராகுல் ஆதரவு - மத்திய அமைச்சர் அமித் ஷா விமர்சனம்..!

1 week ago 6
நாட்டை துண்டாட விரும்பும் சக்திகளுக்கு ஆதரவாக இருப்பதும், தேச விரோத அறிக்கைகளை விடுவதுமே எதிர்க்கட்சி தலைவர் ராகுல் காந்திக்கு வழக்கமாகி விட்டது என மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா கூறியுள்ளார். அமெரிக்காவில் பல்கலைக்கழகம் ஒன்றியில் பேசிய ராகுல், இட ஒதுக்கீடு, ஜம்மு-காஷ்மீர் விவகாரம் குறித்து தனது கருத்துக்களை தெரிவித்திருந்தார். இது குறித்து எக்ஸ் வலைதளத்தில் பதிவிட்டுள்ள அமித் ஷா, பா.ஜ.க இருக்கும் வரை இட ஒதுக்கீட்டை யாராலும் ரத்து செய்ய முடியாது என்றும், பிராந்தியவாதம், மதம், மொழிவாரி பிரச்னைகளை வைத்து அரசியல் நடத்தும் காங்கிரஸின் உண்மையான முகத்தை ராகுல் வெளிக்காட்டியுள்ளதாகவும் கூறியுள்ளார்.    
Read Entire Article