சென்னை எழும்பூர் ரயில் நிலையத்தில் 4, 5மற்றும் 10 ஆகிய நடைமேடைகளில் உள்ள நகரும் படிக்கட்டுகள் பயணிகளுக்கு பயனற்ற முறையில் இருப்பதால், முதியோர், மாற்றுத்திறனாளிகள் உட்பட பல்வேறு தரப்பினர் கடும் அவதிப்படுகின்றனர். இந்த நிலையத்தில் நகரும் படிக்கட்டுகளை முறையாக பராமரித்து, இயக்க வேண்டும் என்று பயணிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
தமிழகத்தில் முக்கிய ரயில் நிலையங்களில் ஒன்றாக எழும்பூர் ரயில் நிலையம் இருக்கிறது. இங்கிருந்து தினசரி 50-க்கும் மேற்பட்ட விரைவு ரயில்கள் இயக்கப்படுகின்றன. இதுபோல, சென்னை கடற்கரை முதல்தாம்பரம், செங்கல்பட்டு இடையே தினசரி 150-க்கும்மேற்பட்ட மின்சார ரயில்கள் எழும்பூர் ரயில்நிலையம் வழியாகவே இயக்கப்படுகின்றன.