தேனியில் சாலை வசதி இல்லாமல் நெஞ்சு வலி வந்தவரை டோலி கட்டி தூக்கி வந்தஉறவினர்கள்... நடுவழியிலேயே உயிரிழந்த பரிதாபம்

1 week ago 7
தேனி மாவட்டம் போடி அருகே சாலை வசதி இல்லாததால்,நெஞ்சுவலியால் துடித்த முதியவர் மருத்துவமனை கொண்டு செல்லும் முன்பே உயிரிழந்தார். வீராச்சாமி எனும் 58 வயது முதியவர் நெஞ்சுவலியால் துடித்த நிலையில் அவருடைய உறவினர்கள் பிச்சாங்கரையில் இருந்து டோலி கட்டி தூக்கி வந்தனர். ஆனால் மருத்துவமனை செல்லும் போது பாதி வழியில் உயிரிழந்ததாக உறவினர்கள் வேதனை தெரிவித்தனர். 20 ஆண்டுகளுக்கு முன்பாக சாலை அமைப்பதற்காக விவசாயிகளின் பட்டா நிலங்கள் வருவாய்துறையினரால் கையகப்படுத்தப்பட்டன.திட்டமிடப்பட்ட சாலையை அமைத்து தருமாறு அப்பகுதி விவசாயிகள் மற்றும் குடியிருப்பு வாசிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
Read Entire Article