தேனி அருகே பிறந்து 35 நாட்களே ஆன பச்சிளம் ஆண் குழந்தையை 1.5 லட்சத்திற்கு விற்ற தந்தையிடம் போலீசார் விசாரனை

1 week ago 6
தேனி அருகே பிறந்து 15 நாட்களே ஆன பச்சிளம் ஆண் குழந்தையை அக்குழந்தையின் தந்தை 1 லட்சம் 50 ஆயிரம் ரூபாய்க்கு விற்பனை செய்துள்ளதாக புகார் எழுந்துள்ளது. போலீசார் அவரிடம் நடத்திய விசாரணையில் தனது மனைவிக்கு மனநிலை சரியில்லாததால்,அவரால் குழந்தையை வளர்க்க முடியாது அதனால் மனைவியின் அண்ணன் குழந்தையை வாங்கிச் சென்று இருப்பதாகவும், குழந்தை  பத்திரமாக இருப்பதாகவும் தெரிவித்துள்ளார். விசாரணையின் போது மதுபோதையில் இருந்த சங்கர் 10,000 ரூபாய் தருகிறேன் எங்களை விட்டு விடுங்கள் என போலீசாரிடம் பேரம் பேசியதாக கூறப்படுகிறது.குழந்தையை காலையில் காவல் நிலையத்தில் ஒப்படைக்காவிட்டால் குழந்தையை விற்பனை செய்த குற்றத்திற்காக வழக்குப் பதிவு செய்து சிறையில் அடைக்க நேரிடும் என சங்கரை போலீசார் எச்சரித்துள்ளனர்.
Read Entire Article