தூத்துக்குடி: தூத்துக்குடி வஉசி துறைமுகத்தில் ரூ.434 கோடி மதிப்பில் அமைக்கப்பட்டுள்ள சர்வதேச சரக்கு பெட்டக முனையத்தை, மத்திய அமைச்சர் சர்பானந்தா சோனோவால் நேற்று நாட்டுக்கு அர்ப்பணித்து வைத்தார்.
தூத்துக்குடி வஉசி துறைமுகத்தின் 9-வது சரக்கு தளம், ஜே.எம்.பக்சி நிறுவனத்தின் மூலம் ரூ.434.17 கோடி மதிப்பீட்டில், அதிநவீன வசதிகளுடன் சர்வதேச சரக்குபெட்டக முனையமாக மாற்றப்பட்டுள்ளது. இதன் திறப்பு விழா மற்றும் துறைமுகத்தில் ரூ.485.67 கோடி மதிப்பீட்டில் முடிவுற்ற பல்வேறு பணிகள் திறப்பு விழா, புதிய பணிகளுக்கு அடிக்கல் நாட்டு விழா ஆகியவை, வஉசி துறைமுகத்தில் நேற்று நடைபெற்றது.