தீபாவளி பண்டிகைக்கு இயக்கப்படும் சிறப்பு ரயில்களை முன்னதாகவே அறிவிக்க கோரிக்கை

2 days ago 5

சென்னை: தீபாவளி பண்டிகை முன்னிட்டு இயக்கப்படும் சிறப்பு ரயில்களை முன்னதாகவே அறிவிக்க வேண்டும் என்று பயணிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

நடப்பாண்டு தீபாவளி பண்டிகை வரும் அக். 31-ம் தேதி (வியாழக்கிழமை) கொண்டாடபடுகிறது. ரயில் டிக்கெட்டைப் பொருத்தவரை 120 நாட்களுக்கு முன்பே முன்பதிவு செய்யும் வசதி உள்ளது. அதன்படி, தீபாவளி பண்டிகைக்கான டிக்கெட் முன்பதிவு ஜூலை 1, 2-ம் தேதிகளில் நடைபெற்றது. தென் மாவட்டங்களுக்கு புறப்படும் நெல்லை, கன்னியாகுமரி, பாண்டியன், பொதிகை, முத்துநகர் உள்ளிட்ட முக்கிய ரயில்களில் சில நிமிடங்களில் டிக்கெட் முன்பதிவு முடிந்துவிட்டது. குறிப்பாக, பாண்டியன், நெல்லை, பொதிகை ஆகிய ரயில்களில் காத்திருப்போர் பட்டியலும் முடிந்து “ரெக்ரெட்” என்று காட்டியது.

Read Entire Article