திருவள்ளூர், கிருஷ்ணகிரியில் கேட்டர்பில்லர் ரூ.500 கோடி முதலீடு: முதல்வர் ஸ்டாலின் முன்னிலையில் சிகாகோவில் ஒப்பந்தம்

1 week ago 10

சென்னை: திருவள்ளூர், கிருஷ்ணகிரி மாவட்டங்களில் உள்ள கட்டுமான கருவிகள் உற்பத்தி நிலையங்களின் விரிவாக்கத்துக்காக, அமெரிக்காவின் கேட்டர்பில்லர் நிறுவனத்துடன் ரூ.500 கோடி முதலீட்டுக்கான புரிந்துணர்வு ஒப்பந்தம், முதல்வர் ஸ்டாலின் முன்னிலையில் சிகாகோவில் கையெழுத்தானது.

இதுகுறித்து தமிழக அரசு வெளியிட்ட செய்திக்குறிப்பு: தொழில் துறையை பொருத்தவரை, இந்திய அளவில் மட்டுமின்றி, உலக அளவிலும் தமிழகம் கவனம் பெற்று வருகிறது. முதல்வர் ஸ்டாலின் தலைமையிலான அரசு பொறுப்பேற்ற இந்த 3 ஆண்டுகளில் ஏராளமான தொழில் நிறுவனங்கள் தமிழகத்துக்கு வந்துகொண்டு இருப்பதே இதற்கு சான்று.

Read Entire Article