திருவள்ளூர்: அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை மருத்துவர் மதுபோதையில் சிகிச்சை அளித்ததாக புகார்

1 week ago 8

திருவள்ளூர்: திருவள்ளூர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் பொதுமருத்துவர் மதுபோதையில் நோயாளிகளுக்கு சிகிச்சை அளித்ததாக புகார் எழுந்துள்ளதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

திருவள்ளூர் ஜெ.என்.சாலையில், அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை செயல்பட்டு வருகிறது. சுமார் 500 படுக்கைகளுடன் கூடிய இந்த மருத்துவமனையில் தீவிர சிகிச்சைப் பிரிவு உள்ளிட்ட பல்வேறு பிரிவுகள், அதிநவீன மருத்துவ உபகரணங்களுடன் செயல்பட்டு வருகிறது.இந்நிலையில், இந்த மருத்துவமனையின் தீவிர சிகிச்சைப் பிரிவில் நேற்று (செப்.10) இரவு பணியில் இருந்த பொது மருத்துவர் நல்லதம்பி என்பவர், மதுபோதையில் நோயாளிகளுக்கு சிகிச்சை அளித்ததாக கூறப்படுகிறது.

Read Entire Article