திருப்பூரில் நாய்கள் துரத்தியதில் கிணற்றுக்குள் விழுந்து 16 ஆடுகள் உயிரிழந்த பரிதாபம்

5 days ago 4

காங்கயம்: காங்கயம் அருகே நாய்கள் துரத்தியதில் கிணற்றுக்குள் விழுந்து 16 ஆடுகள் உயிரிழந்த பரிதாப சம்பவம் நிகழ்ந்துள்ளது. தெரு நாய்களை கட்டுப்படுத்துவதில் உள்ளாட்சி அமைப்புகள் அலட்சியம் காட்டி வருவதால் திருப்பூர் மாவட்டத்தில் கால்நடை விவசாயிகள் பெரும் அச்சம் அடைந்துள்ளனர்.

திருப்பூர் மாவட்டம் காங்கயம் பகுதியில் தெரு நாய்கள் தொல்லை அதிகரித்து வருவதாக பொதுமக்கள் தரப்பில் குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்படுகிறது. இந்த நிலையில், காங்கயம் அடுத்த மறவம்பாளையம் ஊராட்சிக்கு உட்பட்ட செம்மண்குழி கிராமத்தில் பொன்னுசாமி என்பவர் சுமார் 35 செம்மறி ஆடுகளை வளர்த்து வந்தார். இவருக்கு விவசாயமும் ஆடு வளர்ப்பும்தான் பிரதான தொழில். வழக்கம்போல் பொன்னுசாமி வெள்ளிக்கிழமையும் ஆடுகளை தனது தோட்டத்தில் உள்ள பட்டியில் அடைத்துவிட்டு இரவு வீட்டுக்குச் சென்றுள்ளார். சனிக்கிழமை அதிகாலை அந்தப் பகுதியில் சுற்றித் திரிந்த தெரு நாய்கள் பட்டிக்குள் நுழைந்து ஆடுகளை கடிக்க முயன்றுள்ளன. இதில் நாய்களிடமிருந்து தப்பிய செம்மறி ஆடுகள் அங்கிருந்து தெறித்து ஓடியபோது, அருகில் இருந்த 40 அடி ஆழமுள்ள கிணற்றுக்குள் தவறி விழுந்துள்ளன.

Read Entire Article