திருச்சியில் திருமணத்தை மீறிய உறவு பிரச்சனையில் ரவுடி கொல்லப்பட்டதாக தகவல்... 3 பேர் கைது, ஒருவருக்கு வலைவீச்சு

5 days ago 5
திருச்சி மாவட்டம், திருவெறும்பூர் அருகே ரவுடி சுந்தர்ராஜ் தலை துண்டித்து கொல்லப்பட்ட வழக்கில் 3 பேரை கைது செய்த போலீசார் மேலும் ஒருவரை தேடி வருகின்றனர். பனையக்குறிச்சி பகுதியில் வசித்த சுந்தர்ராஜ்க்கு அதே பகுதியை சேர்ந்த ஒரு பெண்ணுடன் திருமணத்தை மீறிய உறவு இருந்ததாக கூறப்படும் நிலையில் அதனை அப்பெண்ணின் உறவினர்கள் கண்டித்ததாக கூறப்படுகிறது. ஆனாலும் இருவரும் உறவை தொடர்ந்த நிலையில், வெள்ளிக்கிழமை இரவு தனது சித்தப்பாவின் வீட்டு மாடியில் தூங்கிக் கொண்டிருந்த சுந்தர்ராஜ் கொலை செய்யப்பட்டார். இதுகுறித்து தீவிர விசாரணை மேற்கொண்ட போலீசார், சம்பந்தப்பட்ட பெண்ணின் அண்ணன் கணேசமூர்த்தி, அவரது மகன்கள் மதி, வடிவேல் ஆகியோரை கைது செய்ததாகவும், அப்பெண்ணின் மகன் மாரிமுத்து என்பவரை தேடி வருவதாகவும் தெரிவித்தனர்.
Read Entire Article