திருக்காட்டுப்பள்ளியில் மாபெரும் பெட்டிஷன் மேளா

1 day ago 6

திருக்காட்டுப்பள்ளி, செப். 19: திருக்காட்டுப்பள்ளி ,பூதலூர் வட்டம் சார்பில் மாபெரும் பெட்டிஷன் மேளா நடத்தப்பட்டது. திருக்காட்டுப்பள்ளி மற்றும் பூதலூர் வட்டாரத்தில் உள்ள காவல் நிலையங்களில் உள்ள புகார்மனுக்கள் விசாரணை சம்பந்தமாக தஞ்சாவூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஆசிஸ் ராவத் உத்தரவின் பேரில் திருவையாறு துணை கண்காணிப்பாளர் தலைமையில் திருக்காட்டுப்பள்ளி காவல் ஆய்வாளர் ஜெகதீஸ்வரன் மற்றும் காவல் துறையினர் திருக்காட்டுப்பள்ளி தனியார் திருமண மண்டபத்தில் மாபெரும் மனுநீதி முகாம் நடத்தப்பட்டது.

மனுநீதி முகாமில் முதலமைச்சரின் தனிப்பிரிவில் கொடுக்கப்பட்ட 10 மனுக்கள் மற்றும் காவல் நிலையங்களில் கொடுத்த பதினைந்து மனுக்கள், மொத்தம் 25 மனுக்கள் மனுநீதி முகாமில் உரிய விசாரணை செய்யப்பட்டு முடித்து வைக்கப்பட்டது.

The post திருக்காட்டுப்பள்ளியில் மாபெரும் பெட்டிஷன் மேளா appeared first on Dinakaran.

Read Entire Article