“திமுகவினர் வன்முறையில் ஈடுபட முயற்சி; அறவழியில் புதிய திட்டப் பணிகளுக்கு பூமி பூஜை” - கே.பி.முனுசாமி

1 week ago 11

கிருஷ்ணகிரி: ராமன் தொட்டி கேட் பகுதியில் புதிய திட்டப் பணிகளை அதிமுக எம் எல்ஏ-வான கே.பி.முனுசாமி தொடங்கிவைக்க திமுகவினர் எதிர்ப்பு தெரிவித்ததால், அதிமுக எம்எல்ஏ-க்கள் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். சுமார் 4 மணி நேரம் போராட்டத்துக்குப் பிறகு திட்டப் பணிகளை தொடங்கி வைத்தார் கே.பி.முனுசாமி.

அதன்பிறகு செய்தியாளர்களிடம் பேசிய அவர் கூறியது: ''ஜனநாயக அரசியலில் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதிநிதிகள் எதிர்கட்சியாக இருந்தாலும், ஆளுங்கட்சியாக இருந்தாலும் அரசு நிர்வாகம் உறுதுணையாக இருக்க வேண்டும். வேப்பனப்பள்ளி சட்டமன்ற தொகுதியில் நான் சட்டமன்ற உறுப்பினராக இருக்கக்கூடிய பகுதியில் பிரதான் மந்திரி கிராம சதக் யோஜனா திட்டத்தில் பல்வேறு திட்டப் பணிகளை கடந்த 3 ஆண்டு காலமாக மாவட்ட நிர்வாகத்துடன் இணைந்து செயல்படுத்தி வருகிறேன்.

Read Entire Article