சென்னை: திமுக பவளவிழா இலட்சினையை சென்னை அண்ணா அறிவாலயம் முகப்பு பகுதியில் முதல்வர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார்.
திமுக சார்பில் ஆண்டுதோறும் அண்ணா பிறந்தநாள், திமுக உருவான நாள், பெரியார் பிறந்த நாள் என மூன்றையும் இணைத்து முப்பெரும் விழா கொண்டாடப்பட்டு வருகிறது. அந்த வகையில் இந்த ஆண்டு திமுக உருவாகி 75 ஆண்டுகள் ஆகும் நிலையில் பவள விழா கொண்டாடப்படுகிறது. இதன்படி பவள விழா உள்ளிட்ட முப்பெரும் விழா வரும் 17-ம் தேதி சென்னை நந்தனத்தில் உள்ள ஒய்எம்சிஏ மைதானத்தில் நடைபெறவுள்ளது.