“திமுக தேர்தலில் தனித்து நின்று ஆட்சி அமைக்க முடியுமா?” - சீமான்

3 days ago 5

காரைக்குடி: “எங்களுடன் சேர்ந்தால் நாட்டு மக்கள் நல்லா இருப்பார்கள் என நினைப்பவர்கள் கூட்டணி வைக்கலாம்” என நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் கூறியுள்ளார். மேலும், ‘திமுக தேர்தலில் தனித்து நின்று ஆட்சி அமைக்க முடியுமா?’ என்று அவர் கேள்வி எழுப்பினார்.

சிவகங்கை மாவட்டம் காரைக்குடியில் இன்று (செப்.16) செய்தியாளர்களைச் சந்தித்த அவர் கூறியது: “தமிழக மீனவர்கள் எல்லை தாண்டி மீன்பிடிப்பதாக இலங்கை கூறுகிறது. கேரள மீனவர்கள் எல்லை தாண்டி மீன் பிடிப்பது இல்லையா? இங்கு மீனவர்கள் என்பது பிரச்சினை அல்ல; தமிழன் என்பதுதான் பிரச்சினை. மற்ற மாநிலத்தவரை மொட்டை அடித்திருந்தால் இந்த நாடும், அரசும் சும்மா இருக்குமா? இது தமிழக மீனவர்களுக்கு அடித்த மொட்டை இல்லை. மத்திய - மாநில அரசுகளுக்கு அடித்த மொட்டை. தமிழகத்தில் 39 எம்பி-க்கள் இருந்தும் என்ன பிரயோஜனம்? கச்சத்தீவை மீட்க வழியில்லை.

Read Entire Article