“திமுக அரசின் சமூக அநீதிக்கு வயது 900 நாட்கள்” - ராமதாஸ் சாடல்

3 days ago 5

சென்னை: “தமிழகத்தில் வன்னியர்களுக்கு உள் இட ஒதுக்கீடு வழங்கலாம் என்று உச்சநீதிமன்றம் ஆணையிட்டு, 900 நாட்கள் ஆகும் நிலையில், சமூக அநீதிக் கூடாரமாகத் திகழும் மு.க.ஸ்டாலின் தலைமையிலான அரசு அந்தத் தீர்ப்பை செயல்படுத்த மறுத்து வருகிறது. சமூக நீதி என்ற பசுத்தோலைப் போர்த்திக் கொண்டு திமுக அரசு காட்சியளித்தாலும், அது சமூக அநீதி என்ற புலி தான் என்பதை வன்னியர்களுக்கு இழைத்து வரும் துரோகத்தின் மூலம் மீண்டும், மீண்டும் நிரூபித்து வருகிறது,” என்று பாமக நிறுவனர் ராமதாஸ் கூறியுள்ளார்.

இது தொடர்பாக பாமகவினருக்கு அவர் எழுதியுள்ள கடிதத்தில், “திமுக அரசின் சமூக அநீதிக்கு நாளையுடன் வயது 900 நாட்கள். ஆம், தமிழகத்தில் வன்னியர்களுக்கு உள் இட ஒதுக்கீடு வழங்கலாம் என்று உச்சநீதிமன்றம் ஆணையிட்டு, நாளையுடன் 900 நாட்கள் ஆகும் நிலையில், சமூக அநீதிக் கூடாரமாகத் திகழும் மு.க.ஸ்டாலின் தலைமையிலான அரசு அந்தத் தீர்ப்பை செயல்படுத்த மறுத்து வருகிறது. சமூகநீதி என்ற பசுத்தோலைப் போர்த்திக் கொண்டு திமுக அரசு காட்சியளித்தாலும், அது சமூக அநீதி என்ற புலி தான் என்பதை வன்னியர்களுக்கு இழைத்து வரும் துரோகத்தின் மூலம் மீண்டும், மீண்டும் நிரூபித்து வருகிறது.

Read Entire Article