திண்டுக்கல் எஸ்பி ஆபீசில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம்

1 day ago 3

திண்டுக்கல், செப். 19: திண்டுக்கல்லில் உள்ள மாவட்ட எஸ்பி அலுவலகத்தில் தமிழக டிஜிபி உத்தரவின்படி பொதுமக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் வாரந்தோறும் ஒவ்வொரு புதன்கிழமையில் நடைபெறும். அந்த வகையில் நேற்று எஸ்பி அலுவலகத்தில் பொதுமக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடைபெற்றது. எஸ்பி பிரதீப் தலைமை வகித்தார். இக்கூட்டத்தில் மாவட்டத்தின் பல்வேறு காவல் நிலையங்களில் புகார் அளித்த மனுதாரர்கள் மற்றும் புதிதாக மனு கொடுக்க வந்த மனுதாரர்கள் தங்கள் குறைகளை எஸ்பியிடம் நேரடியாக புகார் மனுக்களாக அளித்தனர். அவற்றை பெற்று கொண்ட எஸ்பி, பொதுமக்களின் தீர்வு காணப்படாத புகார் மனுக்கள் மீது தனி கவனம் செலுத்தப்பட்டு விரைவில் நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதியளித்தார். தொடர்ந்து எஸ்பி, மனுக்கள் மீது உடனடியாக விசாரணை மேற்கொண்டு நடவடிக்கை எடுக்குமாறு சம்மந்தப்பட்ட போலீசாருக்கு உத்தரவிட்டார்.

The post திண்டுக்கல் எஸ்பி ஆபீசில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் appeared first on Dinakaran.

Read Entire Article