தமிழகத்தில் குருப்-2 முதல்நிலைத் தேர்வை 5.81 லட்சம் பேர் எழுதினர் - ஆப்சென்ட் 2.12 லட்சம்!

5 days ago 6

சென்னை: தமிழகத்தில் குருப்-2 மற்றும் குருப்-2ஏ முதல்நிலைத் தேர்வை 5 லட்சத்து 81 ஆயிரம் பேர் எழுதினர். தேர்வுக்கு விண்ணப்பித்தவர்களில் 2 லட்சத்து 12 ஆயிரம் பேர் ஆப்சென்ட் ஆனார்கள். பொது அறிவு பகுதி மற்றும் பொதுத் தமிழ் பகுதியில் கேள்விகள் சற்று கடினமாக இருந்ததாக பல தேர்வர்கள் கருத்து தெரிவித்தனர்.

குருப்-2 பதவிகளில் 507 காலியிடங்கள், குருப்-2ஏ பதவிகளில் 1,820 காலியிடங்கள் என மொத்தம் 2,327 காலியிடங்களை நிரப்புவதற்கான ஒருங்கிணைந்த முதல்நிலைத் தேர்வு தமிழகம் முழுவதும் 2,763 மையங்களில் சனிக்கிழமை நடந்தது. தேர்வெழுத 7 லட்சத்து 93 ஆயிரத்து 966 பேர் அனுமதிக்கப்பட்ட போதிலும், அவர்களில் 5 லட்சத்து 81 ஆயிரத்து 305 பேர் மட்டுமே தேர்வெழுதினர். எஞ்சிய 2 லட்சத்து 12 ஆயிரத்து 661 பேர் ஆப்சென்ட் ஆனார்கள். தேர்வு காலை 9.30 மணிக்கு தொடங்கி மதியம் 12.30 மணிக்கு முடிவடைந்தது.

Read Entire Article