சென்னை: தமிழகம் முழுவதும் உள்ள கோயில்களின் கும்பாபிஷேக நிகழ்வுகளில் தமிழிலும் மந்திரங்கள் ஓதப்படும் என உயர் நீதிமன்றத்தில் அறநிலையத்துறை தரப்பில் தகவல் தெரிவிக்கப்பட்டது.
சேலம் மாவட்டம், கஞ்சமலையில் உள்ள சித்தேஸ்வர சுவாமி கோயிலில் வரும் செப்.15 அன்று நடைபெறவுள்ள குடமுழுக்கு விழாவில் தமிழ் திருமுறைகள் மற்றும் தமிழில் மந்திரங்களை ஓதி குடமுழுக்கை நடத்த உத்தரவிடக்கோரி, சத்யபாமா அறக்கட்டளையின் தலைவரான சத்யபாமா என்பவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார். இந்த வழக்கு பொறுப்பு தலைமை நீதிபதி டி. கிருஷ்ணகுமார் மற்றும் நீதிபதி பி.பி. பாலாஜி ஆகியோர் அடங்கிய அமர்வில் விசாரணைக்கு வந்தது.