தங்கை முறையில் உள்ள பெண்ணை திருமணம் செய்த நபர்.. நடத்தையில் ஏற்பட்ட சந்தேகத்தால் அடித்து கொன்ற கொடூரன்..!

4 days ago 5
கோவை அருகே தங்கை முறையில் உள்ள பெண்ணை திருமணம் செய்த நபர், தங்கும் விடுதியில் வைத்து அவரை கொன்றுவிட்டு தப்பியோடியபோது போலீசாரிடம் சிக்கினார். சின்னியம் பாளையத்தில் உள்ள விடுதியில் இளம்பெண் முகத்தில் காயங்களுடன் இறந்துகிடந்த நிலையில், அவருடன் தங்கிய நபர் தப்பியோடியதாக ஊழியர்கள் பீளமேடு காவல்நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர். இதையடுத்து அந்தப்பகுதியில் சுற்றித்திரிந்த நபரை பிடித்து விசாரித்தபோது, ஆர்.ஜி புதூரை சேர்ந்த சரவணன், தங்கை முறையான கள்ளபாளையத்தைச் சேர்ந்த கீதாவை திருமணம் செய்துகொண்டதை பெற்றோர் ஏற்காததால் அடிக்கடி விடுதிகளில் அறை எடுத்து தங்கி வந்ததாக தெரிவித்துள்ளார். ஜிம்மில் பயிற்சியாளராக வேலைப்பார்த்து வந்த கீதாவின் நடத்தையில் சந்தேகம் இருந்த நிலையில், விடுதியில் தங்கியிருந்தபோது இருவருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டு அடித்ததில் கீதா மயங்கி விழுந்தததாக போலீசிடம் சரவணன் தெரிவித்துள்ளார்.
Read Entire Article