டெல்லி உள்ளிட்ட வட மாநிலங்களில் நில அதிர்வு

1 week ago 12

புதுடெல்லி: பாகிஸ்தான் நாட்டின் கரோர் நகருக்கு தென்மேற்கே 25கி.மீ தொலைவில் 33 கி.மீ ஆழத்தில் நேற்று பிற்பகல் சுமார் ஒரு மணியளவில் ரிக்டர் அளவில் 5.8ஆக நிலநடுக்கம் ஏற்பட்டது. இதன் தாக்கம் பாகிஸ்தானின் இஸ்லாமாபாத், கராச்சி உள்ளிட்ட நகரங்களில் உணரப்பட்ட நிலையில், இந்தியாவின் வட மாநிலங்களிலும் நில அதிர்வு உணரப்பட்டது.

குறிப்பாக தலைநகர் டெல்லி ஜம்மு-காஷ்மீர், உத்தரப்பிரதேசம், அரியானா, டெல்லி என்.சி.ஆர் உள்ளிட்ட பகுதிகளில் ஏற்பட்ட நில அதிர்வு காரணமாக மக்கள் அச்சமடைந்தனர். சில நொடிகள் மட்டுமே நீடித்த நில அதிர்வு காரணமாக வீடுகளில் இருந்த பொருள்கள் அதிர்ந்ததாக பொதுமக்கள் தரப்பில் தெரிவிக்கப்படுகிறது.

The post டெல்லி உள்ளிட்ட வட மாநிலங்களில் நில அதிர்வு appeared first on Dinakaran.

Read Entire Article