
டோக்கியோ,
மொத்தம் ரூ.8¼ கோடி பரிசுத்தொகைக்கான ஜப்பான் ஓபன் சர்வதேச பேட்மிண்டன் போட்டி டோக்கியோவில் நேற்று தொடங்கியது. இதில் ஆண்கள் ஒற்றையர் பிரிவில் இன்று நடைபெற்ற முதல் சுற்று ஆட்டம் ஒன்றில் இந்தியாவின் லக்சயா சென், சீனாவின் வாங் ஜெங் ஸின்னுடன் மோதினார்.
இந்த போட்டியில் தொடக்கம் முதலே ஆதிக்கம் செலுத்திய லக்சயா சென் 21-11, 21-18 என்ற நேர் செட் கணக்கில் வாங் ஜெங் ஸின்னை வீழ்த்தி 2வது சுற்றுக்கு முன்னேறினார்.