சென்னை: சூலூர்பேட்டையில் இருந்து சென்னை கடற்கரைக்கு சென்ற ரயிலில் பெண் பயணி தவறவிட்ட 3 சவரன் தங்க நகை, புதிய ஆடைகள் அடங்கிய பையை ரயில்வே போலீஸார் மீட்டு உரியவரிடம் ஒப்படைத்தனர். துரிதமாக செயல்பட்ட ரயில்வே போலீஸார் மற்றும் ஆர்.பி.எஃப் போலீஸாரை ரயில்வே காவல் உயரதிகாரிகள் பாராட்டினர்.
திருவள்ளூர் மாவட்டம் கும்மிடிப்பூண்டி தாலுகாவில் உள்ள எளாவூர் கிராமத்தைச் சேர்ந்தவர் சந்தோஷ். இவரது மனைவி ஹேமலதா. இவர் தனது கணவருடன் தாய் வீட்டுக்குச் செல்ல முடிவு செய்தார். அதன்படி, சூலூர்பேட்டையில் இருந்து சென்னை கடற்கரைக்கு புறப்பட்ட மின்சார ரயிலில் எளாவூர் ரயில் நிலையத்தில் நேற்று மாலை 6.10 மணிக்கு ஏறினார்.