சென்னை பள்ளியில் மாணவிகளுக்கான கராத்தே, டேக்வாண்டோ விளையாட்டு பயிற்சி: மேயர் பிரியா தொடங்கி வைத்தார்

1 week ago 8

சென்னை: சென்னை பள்ளி மாணவிகளுக்கான கராத்தே மற்றும் டேக்வாண்டோ விளையாட்டு பயிற்சியை சென்னை மாநகராட்சி மேயர் ஆர்.பிரியா சென்னையில் நேற்று தொடங்கி வைத்தார். இதுகுறித்து சென்னை மாநகராட்சி நேற்று வெளியிட்ட செய்திக்குறிப்பு: 2024-25-ம் ஆண்டுக்கான நிதிநிலை அறிக்கையில், சென்னை தொடக்க, நடுநிலை, உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளிகளில் விளையாட்டில் சிறந்து விளங்கும் மாணவர்களுக்கு அவர்கள் விரும்பும் குத்துச்சண்டை, ஜூடோ, கராத்தே, சதுரங்க விளையாட்டு, கேரம், டேக்வோண்டோ, தடகள விளையாட்டு போட்டிகளில் சிறப்பு பயிற்சி அளிக்கப்படும்.

அவர்களை மண்டல, மாவட்ட, மாநில, தேசிய அளவிலான போட்டிகளில் பங்குபெறச் செய்வதற்கு, தகுதிவாய்ந்த பயிற்சியாளர்கள் தொகுப்பூதியத்தின் அடிப்படையில் நியமனம் செய்யப்படுவர். வரும் கல்வியாண்டில் 6 மாதங்களுக்கு பயிற்சி வகுப்புகள் நடத்தவும் விளையாட்டு உபகரணங்கள் வாங்குவதற்கும் போட்டிகளில் கலந்து கொள்வதற்கு ஏதுவாக மாணவர்களை அழைத்துச் சென்று வரும் செலவினங்களுக்காகவும் ரூ.30 லட்சம் வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டது.

Read Entire Article