சீதாராம் யெச்சூரி மறைவு: தலைவர்கள் இரங்கல்

1 week ago 9

புதுடெல்லி,

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தேசிய பொதுச்செயலாளர் சீதாராம் யெச்சூரி இன்று உடல்நலக்குறைவால் காலமானார். அவரது மறைக்கு ராகுல் காந்தி, மம்தா பானர்ஜி உள்ளிட்ட தலைவர்கள் இரங்கல் தெரிவித்து வருகிறார்கள். அதன் விவரம் வருமாறு:-

*சீதாராம் யெச்சூரி மறைவு செய்தி பெரும் வருத்தம் அளிக்கிறது. பழம்பெரும் அரசியல்வாதியான சீதாராம் யெச்சூரியை நான் நீண்ட காலம் அறிவேன். அவரது மறைவு தேசிய அரசியலுக்கு பெரும் இழப்பாகும்- மேற்கு வங்க முதல் மந்திரி மம்தா பானர்ஜி

*சீதாராம் யெச்சூரி எனக்கு நல்ல நண்பராக இருந்தார். நமது நாட்டை ஆழமாக புரிந்து கொண்டவராகவும் தேசத்தின் சிந்தனையை பாதுகாப்பவராகவும் விளங்கினார். அவருடன் நடத்திய நீண்ட விவாதங்களை நான் இழந்துள்ளேன். சீதாராம் யெச்சூரியின் குடும்பத்தினருக்கும், நண்பர்களுக்கும் இந்த துயரமான தருணத்தில் ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக்கொள்கிறேன்- மக்களவை எதிர்க்கட்சி தலைவர் ராகுல் காந்தி

Read Entire Article