சிதம்பரம்: கார் , லாரி நேருக்குநேர் மோதி விபத்து - ஒரேகுடும்பத்தை சேர்ந்த 5 பேர் பலி

1 week ago 12

சிதம்பரம்,

சென்னையில் இருந்து மயிலாடுதுறைக்கு ஒரேகுடும்பத்தை சேர்ந்த 5 பேர் காரில் சென்றுகொண்டிருந்தனர். கார் இன்று அதிகாலை சிதம்பரம் பு.முட்லூர் புறவழிச்சாலையில் சென்றுகொண்டிருந்தது.

அப்போது, சிதம்பரத்தில் இருந்து கடலூர் நோக்கி சென்றுகொண்டிருந்த லாரியும், காரும் நேருக்குநேர் மோதி விபத்துக்குள்ளானது.

இந்த கோர விபத்தில் காரில் பயணித்த ஒரேகுடும்பத்தை சேர்ந்த 5 பேரும் உடல்நசுங்கி பரிதாபமாக உயிரிழந்தனர். தகவலறிந்து விரைந்து வந்த போலீசார் உயிரிழந்தவர்களின் உடல்களை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், இந்த விபத்து குறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். 

Read Entire Article