திருச்சி: சமூகத்துக்கு திருப்பித் தரும் பழக்கம்தான் நம்மை சிறந்த மனிதர்களாக்கும் என தந்தை பெரியார் கல்லூரியில் நடைபெற்ற ஐம்பெரும் விழாவில் தமிழச்சி தங்கப்பாண்டியன் எம்.பி தெரிவித்தார்.
திருச்சி தந்தை பெரியார் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி முன்னாள் மாணவர்கள் சங்கம் சார்பில், ஐம்பெரும் விழா கல்லூரிக் கலையரங்கில் நடைபெற்றது. கல்லூரி முதல்வர் கா.வாசுதேவன் தலைமை வகித்தார். முன்னாள் மாணவர்கள் சங்க பொதுச்செயலாளர் க.ராஜலிங்கம் வரவேற்றார். பேராசிரியர்கள் எல்.செல்லப்பா, மு.அ.முஸ்தபா கமால் ஆகியோர் முன்னிலை வகித்தனர். விழாவில் முன்னாள் மாணவர்கள் பலரும் பங்கேற்று தங்களது நினைவுகளை பகிர்ந்து கொண்டனர்.