சென்னை: சட்டவிரோத பணப்பரிமாற்ற தடைச்சட்ட வழக்கில் தன்னை சிறையில் அடைத்தது சட்டவிரோதம் என அறிவிக்கக்கோரி ஜாபர் சாதிக் தாக்கல் செய்திருந்த மனுவை உயர் நீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது.
போதைப் பொருள் கடத்தல்வழக்கில் திரைப்படத் தயாரிப்பாளரும், திமுக முன்னாள் நிர்வாகியுமான ஜாபர் சாதிக், மத்திய போதைப் பொருள் கடத்தல் தடுப்புபிரிவு போலீஸாரால் கடந்தமார்ச் 9-ல் கைது செய்யப்பட்டு திஹார் சிறையில் அடைக்கப்பட்டார். இந்நிலையில் சட்டவிரோத பணப்பரிமாற்ற தடைச்சட்டத்தின் கீழ் அவரை அமலாக்கத்துறை அதிகாரிகளும் கைது செய்து சிறை மாற்று உத்தரவுப்படி சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி புழல் சிறையில் அடைத்தனர்.