“கோயில்கள் இனி அரசியல்வாதிகளின் கட்டுப்பாட்டில் இருக்கக் கூடாது” - திருப்பதி லட்டு விவகாரத்தில் ஸ்ரீ ஸ்ரீ ரவிசங்கர் கருத்து

2 hours ago 2

சென்னை: “திருப்பதி லட்டு விவகாரம் இந்துக்களின் ஆழ்மனதில் ஆழமான காயத்தையும், சீற்றத்தையும், ஏற்படுத்தியிருக்கிறது. ஆன்மிகத் தலைவர்கள் மற்றும் பக்தர்களால் கோயில்கள் நிர்வகிக்கப்பட வேண்டும்” என வாழும் கலை அமைப்பின் நிறுவனர் ஸ்ரீ ஸ்ரீ ரவிசங்கர் கருத்து தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “இன்று உலகம் முழுவதும் உள்ள இந்துக்கள் இதயம் நொறுங்கி போயிருக்கிறார்கள். இந்த திருப்பதி லட்டு விவகாரம் இந்துக்களின் ஆழ்மனதில் ஆழமான காயத்தையும், சீற்றத்தையும், ஏற்படுத்தியிருக்கிறது. இது 1857-ஆம் ஆண்டு வாழ்ந்த சிப்பாய் முட்டினி, பிரிட்டிஷ்காரர்களின் தீய நோக்கத்தை (மிருக கொழுப்பு தடவப்பட்ட தோட்டாக்களை தருவது) எதிர்த்து போராடியதை தான் நினைவுக்கு கொண்டு வருகிறது, அந்தச் செயல் பசுவை அவர்களின் தாயாக நினைக்கும் பல இந்து சிப்பாய்களின் மத உணர்வை காயப்படுத்துவதாக அப்போது இருந்தது. இப்போதும் இந்த லட்டு சர்ச்சையால், இந்து சமூகத்தின் உணர்வுகள் எவ்வாறு மிக ஆழமாக புண்பட்டிருக்கிறது என்பதை பார்க்கிறோம். இது ஒரு மன்னிக்க முடியாத குற்றமாகும்.

Read Entire Article