சென்னை: நீதிமன்ற அவமதிப்பு வழக்கில் சேலம் மாவட்ட ஆட்சியருக்கு பிடிவாரன்ட் பிறப்பித்துள்ள சென்னை உயர் நீதிமன்றம், அவரை ஆஜர்படுத்த வேண்டுமென மாவட்ட எஸ்பிக்கு உத்தரவிட்டுள்ளது.
சேலம் மாவட்டம் செங்கரடு கிராமத்தைச் சேர்ந்த எம்.மூர்த்தி சென்னை உயர் நீதிமன்றத்தில் சேலம் மாவட்ட ஆட்சியர் பிருந்தா தேவி, ஆட்சியரின் நேர்முக உதவியாளர் ரவிச்சந்திரன். வட்டார வளர்ச்சி அலுவலர் மாணிக்கவாசகம் ஆகியோருக்கு எதிராக தொடர்ந்திருந்த நீதிமன்ற அவமதிப்பு வழக்கில், “நான் கடந்த 2004-ம் ஆண்டு முதல் சேலம் மாவட்டத்தில் உள்ள பல்வேறு பஞ்சாயத்துக்களில் செயலாளராக பணி புரிந்துள்ளேன். இந்நிலையில் சந்தியூர் ஆட்டையம்பட்டி பஞ்சாயத்தில் பணிபுரிந்த போது, பஞ்சாயத்து நிதியை தவறாக கையாண்டு விட்டதாகக்கூறி மாவட்ட ஆட்சியர் கடந்த 2017-ம் ஆண்டு என்னை பணியிடை நீக்கம் செய்து உத்தரவிட்டார்.