கோயில் உண்டியலை உடைத்து பணம் திருடியவர் கைது

1 day ago 5

மூணாறு, செப்.19: மூணாறு அருகே உள்ள நியூ காலனியில் ஸ்ரீசக்தி விநாயகர் கோயில் உள்ளது. இங்கு கடந்த சனிக்கிழமை இரவு, கோயிலின் கதவை உடைத்து உள்ளே புகுந்த மர்மநபர், அங்கிருந்த உண்டியலை உடைத்து பணத்தை கொள்ளையடித்துச் சென்றுள்ளார். இது குறித்து கோயில் நிர்வாகத்தினர், மூணாறு காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். இது குறித்து போலீசார் வழக்கு பதிந்து, சிசிடிவி காட்சிகளின் அடிப்படையில் விசாரணை நடத்தினர். அதில், குண்டளை சண்டோஸ் காலனி பகுதியைச் சேர்ந்த கௌதம் (20) என்பவர் பணத்தை திருடியது தெரியவந்தது. இதனையடுத்து போலீசார் அவரைக் கைது செய்து, தேவிகுளம் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

The post கோயில் உண்டியலை உடைத்து பணம் திருடியவர் கைது appeared first on Dinakaran.

Read Entire Article