கும்மிடிப்பூண்டி: பட்டியலின மக்கள் வழிபட எழுந்த எதிர்ப்பால் சீல் வைக்கப்பட்ட கோயில் மீண்டும் திறப்பு

3 days ago 5

கும்மிடிப்பூண்டி: கும்மிடிப்பூண்டி அருகே வழுதலம்பேடுவில் பட்டியலின மக்கள் வழிபட எதிர்ப்பு எழுந்ததால், சீல் வைக்கப்பட்ட எட்டியம்மன் கோயில் ஒரு மாதத்துக்குப் பிறகு இன்று (செப்.16) மீண்டும் திறக்கப்பட்டு, மாவட்ட ஆட்சியர், எஸ்.பி. முன்னிலையில் பட்டியலின மக்கள் சுவாமி தரிசனம் செய்தனர்.

திருவள்ளூர் மாவட்டம், கும்மிடிப்பூண்டி அருகே வழுதலம்பேடு கிராமத்தில் அமைந்துள்ளது எட்டியம்மன் கோயில். இந்துசமய அறநிலையத் துறையின் கட்டுப்பாட்டின் கீழ் உள்ள இந்தக் கோயிலிலில் கடந்த 2002-ம் ஆண்டு மகா கும்பாபிஷேக விழா நடைபெற்றது. அப்போது, பட்டியலின மக்கள், மாற்று சமூகத்தினர் என இரு பிரிவினருக்கு இடையே ஏற்பட்ட மோதல் காரணமாக, கோயிலுக்கு சீல் வைக்கப்பட்டது. தொடர்ந்து, 2011-ம் ஆண்டு கோயில் மீண்டும் திறக்கப்பட்டது.இந்நிலையில், 22 ஆண்டுகள் கழித்து, எட்டியம்மன் கோயிலுக்கு கும்பாபிஷேக விழா நடத்த கிராம மக்கள் முடிவு செய்து, திருப்பணிகள் நடைபெற்றது. அந்த திருப்பணிகளுக்கு, பட்டியலின மக்களிடம் வரி வாங்க, மாற்று சமூகத்தினர் மறுத்ததாக கூறப்படுகிறது.

Read Entire Article