கும்பகோணம் | பணப்பலன்களை வழங்கக் கோரி அரசு போக்குவரத்து ஓய்வூதியதாரர்கள் சாலை மறியல்

2 days ago 3

கும்பகோணம்: பணப் பலன்களை வழங்குதல் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி கும்பகோணம் கோட்ட அரசுப் போக்குவரத்து தலைமை அலுவலகம் முன்பு அரசு போக்குவரத்து ஓய்வூதியர்கள் நல அமைப்பு சங்கத்தினர் இன்று சாலை மறியல் நடத்தினர்.

இந்தப் போராட்டத்துக்கு சங்கத்தின் மாநிலத் தலைவர் பி.ராஜா தலைமை வகித்தார். மாநிலத் துணைத் தலைவர் வி.சுப்பையன், மண்டலச் செயலாளர்கள் ஆர்.மனோகரன், வி.செல்வராஜ், எஸ்.ஞானசேகரன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

Read Entire Article