குன்னூரில் தாயைப் பிரிந்த காட்டுமாட்டுக் கன்று; 3 நாட்களாக சாலையில் திரியும் பரிதாபம்

3 days ago 6

குன்னூர்: குன்னூரில் தாயை பிரிந்த காட்டுமாட்டுக் கன்றுக்குட்டி ஒன்று கடந்த மூன்று நாட்களாக திக்குத் தெரியாமல் சாலையில் சுற்றி வருகிறது. இதனால் இந்தக் கன்றுக்குட்டி வாகனத்தில் அடிபடும் சூழ்நிலை உள்ளதால் வனத்துறையினர் மீட்டு தாயிடம் சேர்க்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரிக்கை எழுந்துள்ளது.

நீலகிரி மாவட்டம் குன்னூர் சுற்றுவட்டார பகுதிகளில் அண்மைக் காலமாக வனவிலங்குகளின் நடமாட்டம் அதிகமாக உள்ளது. குறிப்பாக, தேயிலைத் தோட்டங்களில் உலா வந்த காட்டு மாடு கூட்டம் தற்போது குடியிருப்புப் பகுதிகளுக்கு தண்ணீர் மற்றும் உணவு தேடி வர தொடங்கியுள்ளது.

Read Entire Article