குடிநீர் வழங்கக்கோரி கிராமமக்கள் மறியல்

1 day ago 3

காரியாபட்டி, செப்.19: காரியாபட்டி அருகே குடிநீர் வழங்கக்கோரி கிராமமக்கள் மறியலில் ஈடுபட்டனர். காரியாபட்டி அருகே எஸ்.தோப்பூர் கருப்பாயி நகரில் கடந்த 15 நாட்களாக குடிநீர் சப்ளை இல்லை என கூறப்படுகிறது. எனவே கிராமமக்கள் குடிநீர் வழங்கக்கோரி காரியாபட்டி திருச்சுழி ரோட்டில் நேற்று மறியலில் ஈடுபட்டனர். காரியாபட்டி போலீசார் பேச்சுவார்த்தை சம்பவ இடத்திற்கு வந்து பேச்சுவார்த்தை நடத்தி உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்தனர். இதையடுத்து கிராமமக்கள் அனைவரும் கலைந்து சென்றனர். மறியலால் ஒரு மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

The post குடிநீர் வழங்கக்கோரி கிராமமக்கள் மறியல் appeared first on Dinakaran.

Read Entire Article