“கிரீம் பன் வரிக்கு கூட கேள்வி எழுப்ப உரிமை இல்லாத நிலை!” - திமுக பவள விழாவில் ஸ்டாலின் ஆதங்கம்

2 days ago 5

சென்னை: “இன்றைக்கு கிரீம் பன்னுக்கு ஏன் இவ்வளவு வரி போடுகிறீர்கள் என்று கேட்கக் கூட உரிமையில்லாத நிலை ஏற்பட்டுள்ளது. இந்தச் சூழலில், மாநில சுயாட்சியை வென்றெடுப்பதற்கான ஓர் அறிவிப்புதான், இந்த பவள விழா செய்தியாக நான் சொல்ல விரும்புகிறேன். இந்தியாவில் மாநில சுயாட்சி, மாநில சுயாட்சிக் கொள்கைகளுக்காக தொடர்ந்து குரல் கொடுத்து வரும் ஒரே இயக்கம் திமுக மட்டும்தான்” என்று சென்னையில் நடந்த திமுக முப்பெரும் விழாவில் முதல்வர் ஸ்டாலின் பேசியுள்ளார்.

சென்னையில் நடைபெற்ற திமுக முப்பெரும் விழாவில் முதல்வர் மு.க.ஸ்டாலின் உரையாற்றினார். அப்போது அவர் பேசியது: “14 நாட்கள் அமெரிக்கப் பயணத்தை முடித்துவிட்டு, கடந்த 14-ம் தேதி சென்னைக்குத் திரும்பினேன். தொழில் முதலீடுகளை ஈர்ப்பதற்காக, நானும் அமைச்சர் டி.ஆர்.பி.ராஜாவும் அமெரிக்காவுக்குச் சென்றோம். சென்றோம் என்பதைவிட வென்றோம் என்றுத்தான் சொல்ல வேண்டும். பல்லாயிரக்கணக்கான கோடி ரூபாய்க்கான முதலீடுகளும், பல்லாயிரக்கணக்கான வேலைவாய்ப்புகளும் கிடைக்கவுள்ளது. அதை எண்ணி நான் அடைந்த மகிழ்ச்சிக்கு எனக்கு அளவே கிடையாது. அதேபோல், எனக்கு அமெரிக்கவாழ் தமிழர்கள் கொடுத்த வரவேற்பு என்பது, இந்தியாவின் மற்ற மாநில மக்களும் சமூக ஊடகங்களில் வியந்து பேசுகிற அளவுக்கு சென்றடைந்தது.

Read Entire Article