சென்னை: தலைமைச் செயலர் அறிக்கை தாக்கல் செய்யும் வரை கிண்டி ரேஸ் கிளப்பிடமிருந்து கையகப்படுத்தப்பட்ட நிலத்தில் சுற்றுச்சூழல் பூங்கா அமைத்தல் உள்ளிட்ட எந்த பணிகளையும் மேற்கொள்ளக் கூடாது என தேசிய பசுமை தீர்ப்பாயம் உத்தரவிட்டுள்ளது.
வேளச்சேரி ஏரியின் பரப்பளவு ஆக்கிரமிப்பால் குறைந்ததாக கூறி, வேளச்சேரி ஏரி பாதுகாப்பு இயக்க துணைத் தலைவர் குமரதாசன், சென்னையில் உள்ள தென்மண்டல தேசிய பசுமை தீர்ப்பாயத்தில் மனு தாக்கல் செய்திருந்தார்.