கால்பந்து போட்டி

4 months ago 26

ஆவடி: ஆவடி அடுத்த பட்டாபிராமில் விம் சித்தாஸ் கால்பந்தாட்ட கிளப் சார்பில் ஒருநாள் ஐவர் கால்பந்தாட்ட போட்டி சி.பி.ஆர்.டி.இ மைதானத்தில் நடந்தது. இதில் சென்னை, திருவள்ளூர் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளை சேர்ந்த 16 அணிகள் கலந்துகொண்டன. நாக்அவுட் சுற்றுகளாக போட்டிகள் நடந்தன. அரையிறுதியில் வெற்றி பெற்ற சின்னி செலக்ட் மற்றும் பாரதிமோகன் கால்பந்தாட்ட கிளப் அணிகள் இறுதி போட்டிக்கு தகுதி பெற்றன. இறுதி ஆட்டத்தில், சின்னி செலக்ட் அணியின் ஆட்டக்காரர் விக்கி ஆட்டத்தின் 5வது நிமிடத்தில் ஒரு கோல் அடித்தார். தொடர்ந்து, ஆக்ரோஷமாக ஆடிய எதிரணியினர் 7வது நிமிடத்தில் ஒரு கோல் அடிக்க இரு அணிகளும் தலா ஒரு புள்ளிகள் பெற்றதால் சமனில் முடிவடைந்தது.

தொடர்ந்து டைபிரேக்கர் முறையில் இறுதி போட்டி முடிவு எடுக்கப்பட்டது. இதில் சின்னி செலக்ட் அணி வீரர்கள் 3 கோல் அடித்தனர். எதிரணி 2 கோல்கள் அடித்த நிலையில் சின்னி செலக்ட் அணி கோல் கீப்பர் கமலேஷ் 3வதாக அடிக்கப்பட்ட கோலை பறந்து தனது காலால் தடுத்து அணியின் வெற்றிக்கு வழிவகுத்தார். கோலை தடுத்து அணி வெற்றிபெற உதவிய கோல்கீப்பர் கமலேஷுக்கு சக வீரர்கள், பார்வையாளர்கள் பாராட்டு தெரிவித்தனர். தொடர்ந்து 3-2 என்ற கோல் கணக்கில் சின்னி செலக்ட் அணி வெற்றி பெற்றது. வெற்றி பெற்ற அணிகளுக்கு பணமுடிப்பு மற்றும் கோப்பை வழங்கி கவுரவிக்கப்பட்டது.

The post கால்பந்து போட்டி appeared first on Dinakaran.

Read Entire Article