கலைமகள் சபா சொத்துக்களை உறுப்பினர்களுக்கு பிரித்து தர ஓய்வு பெற்ற நீதிபதியை நியமிக்கக் கோரி வழக்கு

1 week ago 13

சென்னை: கலைமகள் சபாவுக்கு சொந்தமான சொத்துக்களை அதன் உறுப்பினர்களுக்கு பிரித்துக் கொடுக்க ஓய்வு பெற்ற நீதிபதியை நியமிக்கக் கோரிய வழக்கு விசாரணையை உயர் நீதிமன்றம் தள்ளி வைத்துள்ளது.

கோவையை தலைமையிடமாகக் கொண்டு இயங்கிய கலைமகள் சபா எனும் நிதி நிறுவனம் 5 லட்சத்து 33 ஆயிரத்து 356 உறுப்பினர்களிடம் பெற்ற முதலீடு மூலமாக தமிழகம், ஆந்திரா மற்றும் கேரளா உள்ளிட்ட மாநிலங்களில் 13 ஆயிரத்து 500 ஏக்கர் நிலங்களை வாங்கி ரியல் எஸ்டேட் தொழிலில் ஈடுபட்டது. இந்நிறுவனத்துக்கு எதிராக முறைகேடு புகார்கள் வந்ததையடுத்து இந்த நிர்வாகத்தை கவனிக்க சிறப்பு அதிகாரியை நியமித்து தமிழக அரசு உத்தரவிட்டது.

Read Entire Article