கங்கைகொண்டான் சிப்காட்  குடியிருப்பு வளாகத்தில் 500 பெண்களுக்கு தங்கும் வசதி: அரசு ஒப்பந்தம்

9 hours ago 4

சென்னை: திருநெல்வேலி மாவட்டம், கங்கைகொண்டான் சிப்காட் தொழிற்பூங்காவில் 870 படுக்கை வசதிகளுடன் அமைக்கப்படவுள்ள, குடியிருப்பு வளாகத்தில் டாடா பவர் சோலார் நிறுவன தொழிற்சாலையில் பணியாற்றும் 500 பெண் பணியாளர்கள் தங்கும் வகையில் தமிழக அரசு மற்றும் டாடா பவர் நிறுவனம் இடையே ஒப்பந்தம் கையெழுத்தானது.

இதுகுறித்து, தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:தமிழக அரசின் 2023-24ம் ஆண்டுக்கான பட்ஜெட்டில், திருநெல்வேலி மாவட்டம் கங்கைகொண்டானில் அமைந்துள்ள சிப்காட் தொழிற் பூங்காவில் பணியாற்றும் 1,500 பெண் பணியாளர்கள் தங்க ஏதுவாக ரூ.50 கோடியில் குடியிருப்பு வளாகம் ஏற்படுத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டது. அந்த வகையில், தற்போது திருநெல்வேலி மாவட்டம், கங்கைகொண்டான் சிப்காட் தொழிற்பூங்காவில் குடியிருப்பு வளாகம் ரூ. ரூ.40 கோடியில் 870 பெண் பணியாளர்கள் பயன்பெறும் வகையில் அமைக்கப்பட்டு வருகிறது.

Read Entire Article