ஒரே நாடு ஒரே தேர்தல்... மோடி அரசின் பதவிக் காலம் முடிவடைதற்குள் இந்த மசோதா நிறைவேற்றப்படும் என பாஜக உறுதி

3 days ago 3
பிரதமர் மோடி தலைமையிலான பாஜக கூட்டணி அரசின் நீண்ட கால இலக்கான ஒரே நாடு ஒரே தேர்தல் தொடர்பான மசோதா நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்பட உள்ளது. மோடி அரசின் பதவிக் காலம் முடிவடைதற்குள் இந்த மசோதா நிச்சயமாக தாக்கல் செய்யப்பட்டு நிறைவேற்றப்படும் என பாஜக உறுதிபட கூறுகிறது. முன்னாள் குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் தலைமையிலான குழு, மக்களவைக்கும் மாநிலங்களின் சட்டமன்றங்களுக்கும் ஒரே நேரத்தில் தேர்தலை நடத்தலாம் என்றும், அதிலிருந்து 100 நாட்களுக்குள் உள்ளாட்சித் தேர்தல்களை நடத்தலாம் என்றும் பரிந்துரைத்துள்ளது. விரைவில் இதற்கான சட்டக் கமிஷனின் ஒப்புதலும் பெறப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
Read Entire Article